உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு” | உலக சாதனை படைத்த குக் வித் கோமாளி புகழின் மகள் | சண்டை காட்சியில் ரிஸ்க் எடுத்த கேப்ரில்லா | அன்று 'அஞ்சான்' படத்தை கிண்டலடித்தவர் : இன்று சூர்யாவின் இயக்குனர் | சின்னத்திரையில் ஹீரோவாக களமிறங்கும் சிநேகன் | ரஜினியின் புதிய புகைப்படம் : ரசிகர்கள் மகிழ்ச்சி | மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் 'வாடிவாசல்' ? | 'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! |
டி.ஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னஸ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'அலங்கு'. குணாநிதி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை 'உறுமீன், பயணிகள் கவனிக்கவும்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ளார். இவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அம்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து மற்றும், புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தில் நாய் ஒன்றும் முக்கியமான கதாபாத்திரமாக நடித்துள்ளது. படம் பற்றி இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் கூறியதாவது: நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் பிரதானம். படத்தின் 95 சதவீத காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.